வலம்புரி
PART - 3
ஸ்வஸ்திகம்
நந்தியாவர்த்தம்
கடாரத் தமிழ்ப ்பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
நந்தியாவர்த்தம் என்னும் நந்தியாவட்டை
லட்சுமிகரமான
மலர்களில் நந்தியாவட்டை என்னும் மலரும் ஒன்று. நந்தியாவர்த்தம் என்பதைத்தான்
அவ்வாறு குறிப்பிடுகிறார்கள். இந்த மலர் சிவனுக்கு மிகவும் உகந்தது. அம்பிகை,
முருகன் விநாயகர் ஆகியோருக்கும் லட்சுமிக்கும் அது உகந்ததாகவே இருக்கிறது.
இம்மலருக்கு மருத்துவ குணங்களுண்டு.
நந்தியாவட்டத்தில்
சிலவகைகள் உண்டு.
பூஜைக்குச் சிறப்பாகப்
பயன்படும் மலர் வகையில் ஐந்து இதழ்கள் இருக்கும். அந்த மலரின் இதழ்கள் வலம்புரியான
சுழற்சியுடையவையாக இருக்கும். நான்கு இதழ்கள் கொண்ட மலரைப் பார்க்கும்போது
ஸ்வஸ்திக் சின்னம்போல தோன்றும். அபூர்வமாக ஆறு இதழ் மலர் காணப்படுவதுண்டு.
நந்தியாவட்டை - நாலிதழும்
ஐயிதழும்
ஸ்வஸ்திகம்
சங்கில் வலம்புரி,
இடம்புரி என்று பேசினோமல்லவா?
அதுபோலவே ஸ்வஸ்திகத்திலும் வலம்புரி,
இடம்புரி உண்டு.
ஸ்ரீயாகிய லக்ஷ்மியின் இருப்பிடங்கள்,
சின்னங்களில் ஸ்வஸ்திகமும் ஒன்று.
பழங்காலத்தில் எந்த முக்கியமான மங்களாசாசனம்
எழுதும்போதும் 'ஸ்வஸ்திஸ்ரீ' என்றே தொடங்குவது வழக்கம். 'ஸ்வஸ்திஸ்ரீ
கோமாறபன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டிய
தேவர்க்கு யாண்டு' என்பது பாண்டியர்களின் மெய்கீர்த்திகளில் ஓர் எடுத்துக்காட்டு.
'ஸ்வஸ்தம்' என்றாலே 'எல்லாம் அதது அததாக, இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறது'
என்றும் பொருளாகிறது. உடலின் நிலையில் எந்தவிதமான நோயும் ஏற்படாமல் அது இருக்கவேண்டிய
தன்மையில் இருக்கக்கூடிய நிலையை 'ஸ்வஸ்தம்' என்று சொல்வதாக காஞ்சி பரமாச்சாரிய
சுவாமிகள் சொல்லியிருக்கிறார்.
'ஸ்வஸ்தி' என்பதே லக்ஷ்மிகரத்தைக்
குறிப்பதுதான். ஆகவே ஸ்வஸ்திகமும் லக்ஷ்மியின் சின்னமாக விளங்குகிறது.
லக்ஷ்மியின் சின்னமாகிய ஸ்வஸ்திகம்
வலம்புரியாக விளங்கும். வலதுகையை முகத்து நேரே வைத்துக்கொண்டு பெருவிரலை உங்கள்
முகத்துக்கு நேரே நீட்டிக்கொள்ளுங்கள். மற்ற விரல்களை கையிலிருந்து 90
டிகிரியில் மடக்குங்கள். இப்போது விரல்கள எந்தப் பக்கமாய்த் திரும்பியுள்ளன?
இந்த மாதிரி ஆரக்காரல்களைத் திருப்பியவாறு இருப்பது வலம்புரி ஸ்வஸ்திகம்.
Anti-clockwise. இடது கையை அவ்வாறு வைத்துக்கொண்டு
பார்த்தீர்களானால் இடம்புரி ஸ்வஸ்திகத்தைக் கண்டுபிடிக்கலாம்.
ஸ்வஸ்திகம் இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும்
புனிதமாக விளங்கியது. ஐரோப்பாவின் பழங்குடியிர் சிலரிடமும்கூட ஸ்வஸ்திகம்
இருந்தது.
இதை ஆரியர்களின் சின்னமாக ஜெர்மன்
சர்வாதிகாரி அடால்·ப் ஹிட்லர் கருதினார். ஆகையால்
தம்முடைய நாட்ஸிக் கட்சியின் சின்னமாகவும் ஜெர்மன் சாம்ராஜ்யமாகிய்ய மூன்றாமூன்றாவது
ரை·க்ஹின் சின்னமாகவும் அதனை
ஏற்படுத்திக்கொண்டார்.
அந்த சின்னத்தை ஒரு தெய்வீக சின்னத்துக்குரிய
மரியாதைக்குரியதாக ஆக்கிக் கொண்டார்கள் ஜெர்மானியர்.
ஹிட்லருக்கு இந்த மாதிரி விஷயங்களில்
ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. கடைசிவரைக்கும் ஜோதிடர்களையும் கலந்தாலோசித்துக்கொண்டே
தோற்றுக்கொண்டிருந்த யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தினார். ஏசு பெருமானாரைச்
சிலுவையில் அறைந்தபின்னர், அக்கால வழக்கப்படி ஓர் ஈட்டியால் விலாவில் குத்தியிருக்கிறார்கள்.
அந்த ஈட்டி யாரிடம் இருக்கிறதோ, அவன் இந்த உலகம் முழுவதையும் கைப்பற்றி ஆளமுடியும்
என்ற நம்பிக்கை பிற்காலத்தில் எவ்வாறோ ஏற்பட்டுவிட்டது. அதனால் அதைத் தேடி
அலைந்தவர்கள் அனேகர். அந்த ஈட்டியை ஹிட்லரும் ரகசியமாகத் தேடியிருக்கிறார்.
ஸ்வஸ்திகத்தை தம்முடைய சின்னமாக அவர்
தேர்ந்தெடுத்துக் கொண்டது சில மர்மசாத்திரங்களின் அடிப்படையில்தான். ஹிட்லருடைய
ஸ்வஸ்திகம் இடம்புரி ஸ்வஸ்திகம். அத்துடன் இல்லாமல் horizontal-vertical
alignment-இல் இராமல், வலப்புற மேல் ஆரக்கால் 45
டிகிரி மேல்நோக்கியவாறு உச்சியில் இருக்குமாறு வைத்துக்கொண்டார்.
ஹிட்லரின் ஸ்வஸ்திகா
1920-ஆம் ஆண்டில் இந்தச் சின்னத்தை டாக்டர்
·ப்ரீட்ரி·க் க்ரோனா என்னும் பல் டாக்டர் ஹிட்லரிடம் கொடுத்தார்.
ஆனால் அவர் கொடுத்தது வலம்புரி ஸ்வஸ்திகம். ஹிட்லர்
ஒரு மர்மமான காரணத்தை முன்னிட்டு அதைக் கண்ணாடி பிரதிபிம்பம் போல் மாற்றி அதனையும்
நாற்பத்தைந்து டிகிரி திருப்பிவிட்டுக்கொண்டார். இது ஒரு தாந்திரிக
யந்திரம்.தம்மை எதிர்ப்பவர்களையெல்லாம் ஸ்ரீயின் நெகட்டிவ் பிரதியாகிய அலக்ஷ்மியின்
பாதிப்புகள் பீடிக்குமாறும் தமக்கு வெற்றி ஏற்படுமாறும் செய்துகொள்வது அந்த
அமைப்பின் குறிக்கோள்களில் ஒன்று.
ஆனால் ஒரு குறிப்பிட ஆண்டு, மாதங்களுக்கு
மட்டுமே அந்த விளவுகள் இருந்தன.
மாந்திரிகர்கள் மாந்திரிகத்தால் பாதிப்புறுவதுபோல
இந்த ஸ்வஸ்திகமும் இடம்புரியாக இருந்ததால் அதன் எதிர்மறையான விளவுகளைப் பிரயோகித்தவர்களின்
பேரிலேயே காட்டிவிட்டது.
ஹிட்லரின் வீழ்ச்சிக்கு இதையும் ஒரு
காரணமாகச் சொல்வார்கள்.
ஸ்வஸ்திஸ்ரீ - லட்சுமிகரம்
லட்சுமிகரமாக இருப்பதைக் குறிக்கும்
சொல் 'ஸ்வஸ்தி' என்பது.
பழங்கால தமிழ் மன்னர்கள் தங்களின்
கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் 'ஸ்வஸ்திஸ்ரீ" என்று ஆரம்பத்திருப்பார்கள்.
'ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸோவன்ஸோ ஸோவன்ஸோ' என்று அந்த வாசகம்
வரும். ஸவஸ்திகம் என்றும் சுவத்திகம் என்றும் குறிப்பிடப்படும் Swastika
-வும் இந்தத் தொடர்பானதுதான். லட்சுமிகரம், மங்கலகரத்தைக் குறிக்கக்
கூடியது அந்தக் குறி.
'ஸ்வஸ்தி' தன்வயமாக இருததல், தன்
வயத்தில் வைத்திருத்தல். அதாவது அமெரிக்கப் படங்களில் பார்க்கிறோமல்லவா.....ஒரு
எல் ஏ. காப்ஸ் வாக்கி-டாக்கியை வைத்துக்கொண்டு சியூயிங் கம் மென்றுகொண்டு,
இன்னொரு கையில் கோக் அல்லது கருங்காப்பி லோட்டா வைத்துகொண்டு, குறுக்கும்நெடுக்குமாக
நடந்துகொண்டே, "situation is well undercontrol. You are Go Go
Go..." என்று சொல்கிறார்கள் அல்லவா?. அந்த 'situation
under own-self's own control' என்பது ஸ்வஸ்தியை ஓரளவுக்குச்
சித்தரிக்கும்.
எல்லாமே தன்வயமாக under
control-ஆகக் கொண்டிருப்பதே ஒரு லட்சுமிகரம்தானே. ஈஸ்வர என்றால்
தலைமையாக எல்லாவற்றுக்கும் நாயகமாக எல்லாவற்றுக்கும் சொந்தக்காரனாக இருப்பது
அல்லவா?
'ஈஸ்வர' என்னும் தன்மையைக் குறிப்பதுதான்
'ஐஸ்வர்ய' என்னும் சொல். ஐஸ்வர்யம் என்பதும் லட்சுமிகரம்தான். லட்சுமியின்
மகளாகக்கூட இருப்பதுண்டு. அஷ்டலட்சுமிகளில் ஐஸ்வர்யலட்சுமி என்றொரு மூர்த்தம்
உண்டு.
'ஐஸ்வர்ய' என்பதில் தலைமைத்துவமும்
அடங்கத்தான் செய்யும்.
ராஜலட்சுமி, ராஜ்யலட்சுமி என்றும்
லட்சுமிகள் உண்டு. சாதாரணமாக 'அஷ்ட லட்சுமி' என்ற தொகுப்பில் இருக்கும் லட்சுமிகளின்
வரிசை பட்டியலுக்கு பட்டியல் வித்தியாசமாகஇருக்கும். அஷ்ட லட்சுமிகள் என்று
பொதுவாகக் குறிப்பிட்டாலும் வேறொரு கணிப்பின்படி நூற்றேட்டு லட்சுமிகளும்
உள்ளனர். விநாயகரிலும் நூற்றெட்டு விநாயகர்கள் உண்டு. ஒவ்வொரு மூர்த்ததுக்கும்
ஒவ்வொரு மூலமந்திரம் இருக்கும். உடலும் அதன் நிலையும் ஆரோக்கியமும் தன்வயமாக
undercotrol-ஆக இருக்கும் நிலையை ஸ்திதியை 'ஸ்வஸ்தம்'
என்று குறிப்பிடுவார்கள்.
ஆரோக்கியம் என்பது நோயற்ற நிலையைக்
குறிக்கும். அந்தக் காலங்களில் பெரியவர்கள் ஆசீர்வதிக்கும்போது 'அரோக திடகாத்ர'
என்று குறிப்பிடுவார்கள். 'அரோக' என்பது ரோகமற்ற - நோயற்ற நிலையைக் குறிப்பது.
'காத்ரம்' என்பதைச் சொல்வழக்கில் சாதாரணமாக ஆகிருதியான உடல்நிலையைக் குறிப்பிடப்
பயன்படுத்தினார்கள். திடமான காத்திரமும் ரோகமற்ற நிலையும் ஆசியாக வழங்கினார்கள்.
'அரோக' என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது 'ஆரோக்யம்'.நோயின் வசமான உடலும்
மனமும் மீண்டும் தன்னுடைய சொந்த normal-ஆன நிலைக்கு வருவதை
ஸ்வஸ்தமாவது என்று குறிப்பிட்டார்கள். ஸ்வஸ்தமாக்குவது ஒரு முக்கியமான கலை.
வேதங்களின் துணை நூல்களாகிய உபவேதங்களில் ஒன்றாகிய ஆயுள்வேதத்தின் ஓர் அங்கம்
ஸ்வஸ்தமாக்கும் கலை. Healing, Therapy முதலிய சொற்கள்
அந்தக் கலையின் அம்சங்கள்.
அன்புடன்
ஜெயபாரதி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU